sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கேரட் விலை உச்சம்; வீழ்ச்சியை நோக்கி பீன்ஸ்

/

கேரட் விலை உச்சம்; வீழ்ச்சியை நோக்கி பீன்ஸ்

கேரட் விலை உச்சம்; வீழ்ச்சியை நோக்கி பீன்ஸ்

கேரட் விலை உச்சம்; வீழ்ச்சியை நோக்கி பீன்ஸ்


ADDED : ஆக 21, 2024 11:35 PM

Google News

ADDED : ஆக 21, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : நீலகிரியில் கேரட் விலை உயர்ந்த நிலையில், பீன்ஸ் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு மலைக் காய்கறிகள், மேட்டுப்பாளையம், சென்னை, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்., மாதம் அதிகபட்ச விலை கிடைத்த நிலையில் தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கேரட் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கேரட் கிலோ, குறைந்தபட்சம், 70 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 110 ரூபாய் வரை கிடைத்தது. தற்போது, 90 ரூபாய் வரை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. அதே நேரத்தில் பீன்ஸ் கிலோ, 20 முதல் 30 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது.

கேத்தி விவசாயி ஹரிஹரன் கூறுகையில்,''கடந்த ஏப்., மே மாதங்களில் கடும் வெப்பத்தின் காரணமாகவும், போதிய தண்ணீர் கிடைக்காமலும் கேரட் விதை விதைப்பது குறைந்தது. அதே நேரத்தில் மற்ற இடங்களில் இருந்து காய்கறி மண்டிகளுக்கு வரும் கேரட் வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக கேரட் விலை உயர்ந்துள்ளது. இந்த உயர்வு தொடர்ந்து நீடிப்பதுடன், விலை மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளது. பீன்ஸ் வரத்து அதிகரித்த நிலையில் விலை குறைந்துள்ளது,''என்றார்.






      Dinamalar
      Follow us