sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு பள்ளியில் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

அரசு பள்ளியில் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 13, 2025 09:13 PM

Google News

ADDED : மார் 13, 2025 09:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, பந்தலுார் அருகே கரிய சோலை, அரசு உயர்நிலை பள்ளியில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், குடிமக்கள் நுகர்வோர் மன்றம், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டது.

நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மணிவாசகம் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் புளோரா குளோரி தலைமை வகித்தார். ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கூடலுார் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார், நுகர்வோரின் கடமைகள் என்ன என்பது குறித்து விளக்கி பேசியதுடன், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் நுகர்வோர் தினம் குறித்தும், நுகர்வோர் பொருட்களை வாங்குவது மற்றும் அதன் தரத்தை பரிசோதிப்பது குறித்து விளக்கி பேசினார்.

மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us