/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகனங்களை கழுவுவதால் மாசடைந்து வரும் தண்ணீர்
/
வாகனங்களை கழுவுவதால் மாசடைந்து வரும் தண்ணீர்
ADDED : ஆக 13, 2024 01:52 AM

கோத்தகிரி;கோத்தகிரி புதுார் நீர் ஆதாரத்தில் வாகனங்கள் கழுவுவதால், தண்ணீர் மாசடைந்து வருகிறது.
கோத்தகிரி - கோடநாடு சாலையில், கேர்பெட்டா புதுார் காலனி அமைந்துள்ளது. சாலை ஓரத்தில், வனவிலங்குகள் வறட்சி நாட்களில் தண்ணீர் பருக எதுவாக, வனத்துறை சார்பில், 'செக்டேம்' கட்டப்பட்டுள்ளது.
சோலையில் உற்பத்தியாகும் சுத்தமான இந்த தண்ணீரை, புதுார் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். வனவிலங்குகளும் அவ்வப்போது தண்ணீர் பருகி வருகின்றன.
வனத்துறை, ' இங்கு வாகனங்கள் கழுவக்கூடாது; மீறினால் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரிக்கை பலகை வைத்து, செக்டேமை பராமரித்து வருகிறது.
இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல், நாள்தோறும் இங்கு வாகனங்கள் கழுவப்படுகிறது. இதனால், சோப்பு மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் ஆயில் கழிவுகள் கலந்து தண்ணீர் மாசடைந்துள்ளது. தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.
எனவே, அத்துமீறி வாகனங்கள் கழுவுவோர் மீது, வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

