sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையோரம் ஆபத்தான மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

/

சாலையோரம் ஆபத்தான மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

சாலையோரம் ஆபத்தான மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

சாலையோரம் ஆபத்தான மரக்கிளைகள் வெட்டி அகற்றம்


ADDED : ஜூலை 10, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுார் மார்த்தோமா நகர் பகுதியில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், ஆபத்தான நிலையில் உள்ள மரக் கிளைகளை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.

கூடலுாரில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழையின் போது சாலை ஓரங்களில் மரங்கள் விழுந்து அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க, ஆபத்தான மரங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

முதல் கட்டமாக மார்த்தோமா நகர் பகுதியில் வருவாய்துறையினர் ஆய்வு செய்து, ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அதன் கிளைகளை வெட்ட பரிந்துரை செய்தனர்.

தொடர்ந்து, கூடலுார் ஆர்.டி.ஓ., உத்தரவுப்படி, அப்பகுதி சாலை ஓரங்களிலிருந்து ஆபத்தான மரங்களின் கிளைகள் வெட்டும் பணி நடந்து வருகிறது.

டிரைவர்கள் கூறுகையில், 'வெட்டப்படும் மரங்களின் கிளைகளின், துண்டுகள் சாலையோரம் போடப்படுவதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அவைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'இப்பகுதியில் வெட்டப்படும் மரக்கிளைகள், வனத்துறையினரிடம், ஒப்படைக்கப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us