sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை கும்கிகள் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க முடிவு

/

யானை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை கும்கிகள் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க முடிவு

யானை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை கும்கிகள் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க முடிவு

யானை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை கும்கிகள் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க முடிவு


ADDED : ஜூலை 03, 2024 02:18 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுார் தொரப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள், முகாமிட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றன. மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்த நிலையில், முதுமலையிலிருந்து, இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானைகளை விரட்டும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், யானை பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், கோரிக்கையை வலியுறுத்தி, மாக்கமூலா பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து, அங்குள்ள மைதானத்தில் தற்காலிக குடில் அமைத்தனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை.

தொடர்ந்து, கூடுதல் எஸ்.பி., தங்கவேல், டி.எஸ்.பி.,கள் வசந்தகுமார், சரவணன் தலைமையில் போலீசார், மாக்கமூலா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கூடலுார் டி.எப்.ஓ., அலுவலகத்தில் டி.எப்.ஓ.,வெங்கடேஷ் பிரபு தலைமையில், ஆர்.டி.ஓ., செந்தில்குமார், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, டி.எஸ்.பி.,கள் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது.

அதில்,'மக்களை அச்சுறுத்திவரும் காட்டு யானை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.

முடிவில், 'கூடுதல் வன ஊழியர்கள் நியமித்து, கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகள் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்' என, டி.எப்.ஓ., உறுதியளித்தார். அதனை மக்கள் ஏற்று கொண்டு கலைந்து சென்றனர்.

பொய் தகவல்களை பரப்ப வேண்டாம்...

கூடலுாரில் காட்டு யானைகளை விரட்டுவதற்கான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் யானைகள் பாதிப்பு குறித்து வெளிவரும் வீடியோக்களை, கூடலுாரில் நடப்பது போன்று சித்தரித்து, சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால், மக்களிடம் பதட்டமான சூழல் ஏற்படுகிறது. 'இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.








      Dinamalar
      Follow us