sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குடிநீர் தட்டுப்பாடு முன்னேற்பாடு அவசியம்

/

குடிநீர் தட்டுப்பாடு முன்னேற்பாடு அவசியம்

குடிநீர் தட்டுப்பாடு முன்னேற்பாடு அவசியம்

குடிநீர் தட்டுப்பாடு முன்னேற்பாடு அவசியம்


ADDED : மார் 21, 2024 10:40 AM

Google News

ADDED : மார் 21, 2024 10:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுாரில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

குன்னுார் நகராட்சியில், 30 வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமான ரேலியா அணை மற்றும் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து, 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது, கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு துவங்கியுள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது, 5 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணையில், தற்போது, 36 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. வரும் ஏப்., மே மாதங்களுக்கு இந்த நீர் போதுமானதாக இருக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் வருவதற்கு முன்பு கரன்சி, ஜிம்கானா, பந்துமை, ஹைபீல்டு உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து தினமும், மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால். ஜிம்கானா குடிநீர் நிலையம், சிம்ஸ் பார்க் அருகே உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் பூட்டப்பட்டு பயனின்றி கிடக்கிறது.

எனவே, வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்படாமல் இருக்க ஜிம்கானா உட்பட மற்ற தடுப்பணை, நீரேற்று நிலைய தொட்டிகளை பராமரித்து குடிநீர் வினியோகத்தை தடையின்றி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us