/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துாய்மை பணிகளுக்கு மின்சார வாகனங்கள்
/
துாய்மை பணிகளுக்கு மின்சார வாகனங்கள்
ADDED : ஏப் 04, 2024 11:48 PM

பாலக்காடு;பாலக்காடு நகரில், துாய்மை பணிகளுக்கு, தள்ளு வண்டிகளுக்கு பதிலாக, மின்சார வாகனங்கள் வந்துள்ளன.
பாலக்காடு நகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஸ்மிதேஷ் கூறியதாவது:
நகராட்சியில், முதல் கட்டமாக, மூன்று முதல் ஆறு வார்டுகளில், துாய்மை பணிகளுக்கு மின்சார வாகனங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. முக்கியமாக ஸ்டேடியம், பஸ் ஸ்டாண்ட், அரசு பஸ் ஸ்டாண்ட், பெரிய கடை வீதி, கோர்ட் ரோடு, கோட்டை மைதானம் ஆகிய இடங்களில், சாலையோர குப்பைகள் எடுக்கும் பணிகளுக்காக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
மத்திய அரசின் நிதியில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் பதிவு செய்த பின், பயன்பாட்டுக்கு வரும். நகராட்சியில் உள்ள, 50 வார்டுகளிலும் துாய்மை பணிகளுக்காக, வார்டுக்கு ஒரு மின்சார வாகனம் வாங்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு அரசின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

