/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் மலை பாதையில் குட்டியுடன் யானைகள் முகாம்
/
குன்னுார் மலை பாதையில் குட்டியுடன் யானைகள் முகாம்
ADDED : மே 19, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;'குன்னுார் மலை பாதையில் குட்டியுடன் காட்டு யானை நிற்பதால் வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கே.என்.ஆர்., குரும்பாடி பகுதிகளில் குட்டியுடன் காட்டு யானை நடமாட்டம் உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'இந்த யானைகள் அவ்வப்போது சாலையோரங்களில் வந்து நிற்பதால், முன்னெச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.
பயணிகள் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது. விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

