sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மழையை தொடர்ந்து வறண்ட ஆறுகளில் நீர்வரத்து

/

மழையை தொடர்ந்து வறண்ட ஆறுகளில் நீர்வரத்து

மழையை தொடர்ந்து வறண்ட ஆறுகளில் நீர்வரத்து

மழையை தொடர்ந்து வறண்ட ஆறுகளில் நீர்வரத்து


ADDED : மே 12, 2024 11:41 PM

Google News

ADDED : மே 12, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்தில் கோடை மழை ஏமாற்றி வந்ததால், இவ்வாண்டு துவக்கம் முதல் வறட்சி ஏற்பட்டு, வனப்பகுதி பசுமை இழந்தும்; நீர்நிலைகள் நீர்வரத்து இன்றி வறண்ட நிலைக்கும் மாறி வந்தது. இதனால், வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வனத்தீயில் வனப்பகுதியும் பாதிக்கப்பட்டது.

வறட்சியான பகுதிகளில், வனவிலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, வன ஊழியர்கள் வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று சிமென்ட் தொட்டிகளில் ஊற்றி வருகின்றனர். தொடர்ந்து, கோடை மழை ஏமாற்றி வந்ததால், வறட்சியின் தாக்கத்தால் வனத்துறையினர் கவலையடைந்தனர். இதனால், கோடை மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மசின குடி பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. தொடரும் கோடை மழையினால் வறண்ட நிலையில் காணப்பட்ட கெதரல்லா, சிறியூரல்லா ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் வெள்ளம் வர துவங்கி உள்ளதால், வனதுறையினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில்,'நடப்பாண்டு ஜன., முதல் கோடை மழை ஏமாற்றி வந்ததால், பல நீர்நிலைகள் வறண்ட நிலைக்கு மாறியது வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையில், வறண்டு காண்டப்பட்ட ஆறுகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது. கோடை மழை தொடர்ந்து பெய்தால் வனவிலங்குகள் குடிநீர் பிரச்னை முழுமையாக தீர்வதுடன், வனப்பகுதி பசுமைக்கு மாறி உணவு தட்டுப்பாடும் நீங்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us