/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வன விலங்கு கணக்கெடுப்பு 170 வன ஊழியர்கள் பங்கேற்பு
/
வன விலங்கு கணக்கெடுப்பு 170 வன ஊழியர்கள் பங்கேற்பு
வன விலங்கு கணக்கெடுப்பு 170 வன ஊழியர்கள் பங்கேற்பு
வன விலங்கு கணக்கெடுப்பு 170 வன ஊழியர்கள் பங்கேற்பு
ADDED : மே 10, 2024 11:32 PM

கூடலுார்;மசினகுடி கோட்டத்தில் துவங்கிய, பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில், 170 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம் உள்வட்டம் மற்றும் வெளிவட்டமான மசினகுடி கோட்டத்தில், ஆண்டு தோறும் பருவமழைக்கும் முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
இதன்படி, நடப்பாண்டு, முதுமலை உள்வட்டம் பகுதியில், 30 முதல், 7ம் தேதி வரை பருவ மழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, முதுமலை மசினகுடி கோட்டத்தில், பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இப்பணிகள், 15ம் தேதி வரை நடக்கிறது.
இதற்காக மசினகுடி கோட்டத்துக்கு உட்பட்ட சீகூர், சிங்காரா, நீலகிரி கிழக்கு ஆகிய வனச்சரகங்கள், 34 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரிவுக்கு, 4 முதல் 5 வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணியின் போது வனவிலங்குகளில், கணக்கெடுப்பு குறித்த விபரங்களை மொபைல் செயலி, மற்றும் டேட்டா சீட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'மசினகுடி கோட்டத்தில் நடைபெறும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில், 170 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணியின் போது பதிவு செய்யப்படும் விபரங்களை, ஆய்வு செய்து வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்படும்,' என்றனர்.