sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மரங்களில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் வன ஊழியர்கள்

/

மரங்களில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் வன ஊழியர்கள்

மரங்களில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் வன ஊழியர்கள்

மரங்களில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் வன ஊழியர்கள்


ADDED : ஏப் 09, 2024 11:37 PM

Google News

ADDED : ஏப் 09, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முதுமலை, மசினகுடி அருகே, வனத்தீ கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில், காய்ந்த மரங்களில் உள்ள தீயை அணைக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.

முதுமலை புலிகள் காப்பகம் ஊட்டி மற்றும் மசினகுடி வன கோட்டங்களில், நடப்பு ஆண்டு கோடை மழையும் ஏமாற்றி வருகிறது. இதனால், ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பல இடங்களில் வனத்தீ ஏற்பட்டு வருகிறது. வனவிலங்குகளுக்கு உணவு குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மசினகுடி ஆச்சக்கரை பகுதியில் நேற்று முன்தினம், மூங்கில் காட்டில் வனத்தீ ஏற்பட்டது.

வன ஊழியர்கள் தீயணைப்புத்துறை ஊழியர்கள் உதவியுடன், போராடி தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தீ கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில், காய்ந்த மரங்களில் ஏற்பட்ட தீ நேற்றும், எரிந்து கொண்டிருந்தது. வன ஊழியர்கள், கேன்களில் தண்ணீர் எடுத்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'வனத்தீ கட்டுப்படுத்தப்பட்டாலும், காய்ந்த மரங்களில் உள்ள தீயினால், மீண்டும் வனத்தீ பரவு வாய்ப்பு உள்ளது.

அதனை தடுக்கவே மரங்களில் உள்ள தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளோம். இப்பகுதிகளில் நாளுக்கு நாள் வறட்சி அதிகரித்து வருவதால், வனத்தீ பரவும் அபாயம் உள்ளது.

அதனால், உள்ளூர் மக்களும்; சுற்றுலா பயணிகளும் வனப்பகுதியில் தீ பரவ காரணமாக இருக்க கூடாது. சாலையில் வாகனங்களில் செல்பவர்கள், 'சிகரெட்; தீ பெட்டி குச்சி' ஆகியவற்றை தீயுடன் வீசக்கூடாது.

அதனை மீறி வனத்தீ ஏற்பட காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us