/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
5 நாள் சுற்று பயணமாக கவர்னர் ஊட்டி வந்தார்
/
5 நாள் சுற்று பயணமாக கவர்னர் ஊட்டி வந்தார்
ADDED : மார் 30, 2024 11:55 PM
ஊட்டி:சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கவர்னர் ரவி, அங்கிருந்து, சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக, நேற்று மாலை 6:00 மணிக்கு ஊட்டி ராஜ்பவன் வந்தார்.
கவர்னரை, நீலகிரி கலெக்டர் அருணா, எஸ்.பி., சுந்தரவடிவேல் ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். இன்று, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாம் செல்கிறார். அங்கு யானைகள் பராமரிப்பு குறித்து பார்வையிடுகிறார். நாளை, 1ம் தேதி ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். 2ம் தேதி குன்னூருக்கு செல்கிறார்.
3ம் தேதி குந்தா பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டுக்கு செல்கிறார். தொடர்ந்து, 4 ம் தேதி காலை 11: 00 மணியளவில் ஊட்டி ராஜ்பவனிலிருந்து, கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் சுற்று பயணத்தை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

