/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏலத்தில் தேயிலை விற்பனை அதிகரிப்பு
/
ஏலத்தில் தேயிலை விற்பனை அதிகரிப்பு
ADDED : ஜூலை 09, 2024 12:52 AM
குன்னுார்;குன்னுாரில் நடந்த, 27வது தேயிலை ஏலத்தில் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்த போதும் சராசரி விலை குறைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை துாள் உற்பத்தி கடந்த சில மாதங்களாக கடும் வீழ்ச்சியடைந்த போதும், சமீபத்தில் பெய்த மழையால் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்தது. கடந்த, 4 வாரங்களாக தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்து உற்பத்தியும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 27வது ஏலத்தில், தேயிலை துாள் வரத்து மற்றும் விற்பனை உயர்ந்தது. ஏலத்தில், '16.61 லட்சம் கிலோ இலை ரகம், 4.94 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 21.55 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.
அதில், '14.59 லட்சம் கிலோ இலை ரகம், 3.41 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 18.01 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 19.65 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 109.07 ரூபாய் என இருந்தது. கடந்த வாரத்தை விட இந்த ஏலத்தில், 1.08 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது.
கடந்த வாரம், 92 சதவீத விற்பனையான நிலையில், 83.58 சதவீதம் வீழ்ச்சியை கண்டது. சராசரி விலையும், 2 ரூபாய் வரை குறைந்தது. எனினும், கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 2.13 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்தது. மொத்த வருமானமும், 82 லட்சம் ரூபாய் அதிகரித்தது.