sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சீதாராமர் கோவில் கும்பாபிஷேகம்

/

சீதாராமர் கோவில் கும்பாபிஷேகம்

சீதாராமர் கோவில் கும்பாபிஷேகம்

சீதாராமர் கோவில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 12, 2024 10:26 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : நடூரில் புதிதாக கட்டிய சீதாாராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் நடூர், கண்ணப்பன் லே அவுட்டில், சீதாராமர் பஜனை மடம் செயல்பட்டு வந்தது. 137 ஆண்டுகள் பாரம்பரிய மடம், சீதாராமர் கோவிலாக மாற்றி கட்டப்பட்டது. இந்த கோவில் கருவறையில், ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ஆகிய மூலவர் சுவாமி சிலைகள் உள்ளன.

இக்கோவில் கும்பாபிஷேக விழா, 11ம் தேதி துவங்கியது. மதியம் கோதண்ட ராமர் பஜனை கோவிலில் இருந்து, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவிலில் அங்குரார்ப்பணம், கும்ப ஆவாகணம், ஹோமம், திவ்ய பிரபந்தம், சாற்று முறை, விமான கலசம் ஸ்தம்பிதம், சுவாமி சிலைகள் பிரதிஷ்டை ஆகியவை செய்யப்பட்டன.

நேற்று காலை வேத பாராயணம், திவ்யபிரபந்தம், யாத்ராதானம் ஆகியவை நடந்தது. காலை 9:00 லிருந்து, 10 மணி வரை யாகசாலையில் இருந்து, தீர்த்தக் கலசங்கள் எடுத்துச் சென்று, கோபுர கலசத்திற்கும், சுவாமிகள் மீதும், காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர் தலைமையில், ஹரிகிருஷ்ண சுவாமி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மதியம் அலங்கார பூஜையும், அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.






      Dinamalar
      Follow us