sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிறுத்தை நடமாட்டம்: கண்காணிப்பில் வனத்துறை

/

சிறுத்தை நடமாட்டம்: கண்காணிப்பில் வனத்துறை

சிறுத்தை நடமாட்டம்: கண்காணிப்பில் வனத்துறை

சிறுத்தை நடமாட்டம்: கண்காணிப்பில் வனத்துறை


ADDED : ஏப் 24, 2024 09:50 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுார் அருகே தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

பந்தலுார் அருகே, உட்பட்டியில் இருந்து புஞ்சைவயல் வழியாக, கொளப்பள்ளி செல்லும் சாலை அமைந்துள்ளது. இங்கு புஞ்சைவயல் என்ற இடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு தொழிற் பயிற்சி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விவசாய விளைபொருட்கள் பதப்படுத்தும் கூடம் ஆகியவை அமைந்துள்ளன.

இந்த அரசு கட்டடங்களுக்கு மத்தியில் புதர் பகுதி உள்ளது. நேற்று காலை சாலையின் கீழ் பகுதி புதரில் இருந்து, அரசு கட்டடங்கள் உள்ள பகுதிக்கு சிறுத்தை ஒன்று செல்வதை மக்கள் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து, பிதர்காடு வனச்சரகர் ரவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வனக்காவலர் காந்தி தலைமையிலான வன குழுவினர், புதர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். ஆனால், சிறுத்தை பதுங்கிய இடம் குறித்து தெரியவில்லை. எனினும் இந்த பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சுகாதார நிலையத்திற்கு செல்லும் நபர்கள் மற்றும் இந்த சாலையில் நடந்து செல்வோர், தனியாக நடந்து செல்வதை தவிர்க்கவேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us