ADDED : ஜூலை 03, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;கோத்தகிரியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி பகுதியை சேர்ந்த ரத்தினம்,68. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த. 14 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், கோத்தகிரி போலீசார் மற்றும் குன்னூர் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி 'போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, ஊட்டி மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, குன்னுார் கிளை சிறையில் அடைத்தனர்.