sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை பாதையில் பழுதாகி நின்ற பஸ் கோடை வெயிலில் பயணிகள் அவதி

/

மலை பாதையில் பழுதாகி நின்ற பஸ் கோடை வெயிலில் பயணிகள் அவதி

மலை பாதையில் பழுதாகி நின்ற பஸ் கோடை வெயிலில் பயணிகள் அவதி

மலை பாதையில் பழுதாகி நின்ற பஸ் கோடை வெயிலில் பயணிகள் அவதி


ADDED : மார் 22, 2024 09:00 PM

Google News

ADDED : மார் 22, 2024 09:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;கோவையில் இருந்து, ஊட்டிக்கு வந்த அரசு பஸ் பழுதடைந்து மலைபாதையில் நின்றதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பெரும்பாலான பஸ்கள் பழைய பஸ்களாக உள்ளது. அதில்,அவ்வப்போது பஸ்கள் பழுதடைந்து ஆங்காங்கே நிற்பதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கோவையில் இருந்து ஊட்டிக்கு வந்த அரசு பஸ் பழுதடைந்து குன்னுார் மலை பாதையில் மரப்பாலம் அருகே நின்றது.

பஸ்சில் இருந்த, 50க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டு, மாற்று பஸ்கள் வரும் வரை, கோடை வெயிலில் காத்திருந்து அனுப்பி வைத்தனர்.

சில பயணிகள் அவ்வழியாக வந்த கார்களில் 'லிப்ட்' கேட்டும், கூடுதல் தொகை கொடுத்தும் சென்றனர்.

பயணிகள் கூறுகையில்,' மலை பகுதிக்கு சில புதிய பஸ்களை இயக்கி விட்டு, சமவெளியில் ஓடி தேய்ந்த பழைய பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றனர். இதனால், கோடை வெயிலில் பயணிகள் அவதிப்பட வேண்டி உள்ளது.

இதனை ஆய்வு செய்து, புதிய பஸ்களை அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us