ADDED : செப் 11, 2024 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் ஓட்டுபட்டறை சாலையை சிறுத்தை கடந்து சென்றதால் மக்கள் இரவில் வெளியில் நடமாட அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,9:30 மணியளவில் ஓட்டுப்பட்டறை சாலையில் குடியிருப்புகள் வழியாக சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது. அப்போது, அவ்வழியாக சென்ற பலரும் வாகனங்களை நிறுத்தி மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர்.
குடியிருப்புகள் அதிகம் உள்ள ஓட்டுபட்டறை சாலையிலும் இரவில், 9:00 மணிக்கு பிறகு சிறுத்தை கடந்து செல்வதால் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர மக்கள் அச்சமடைகின்றனர். எனவே, வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

