sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பாலத்தில் ஏற்பட்ட அடைப்பு சீரமைப்பு

/

பாலத்தில் ஏற்பட்ட அடைப்பு சீரமைப்பு

பாலத்தில் ஏற்பட்ட அடைப்பு சீரமைப்பு

பாலத்தில் ஏற்பட்ட அடைப்பு சீரமைப்பு


ADDED : மே 29, 2024 10:21 PM

Google News

ADDED : மே 29, 2024 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:

கூடலுார் தொரப்பள்ளி அருகே, குணில் சாலையில் உள்ள பாலத்தில் மூங்கில், மரங்களால் ஏற்பட்ட அடைப்பு சீரமைக்கப்பட்டது.

கூடலுார் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடைமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் அவ்வப்போது மழை வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போது, தொரப்பள்ளி அருகே உள்ள, குணில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், அடித்து வரப்பட்ட மூங்கில் ஆற்றிலுள்ள தடுப்பணையில் கிடந்தது.

அதே போன்று, ஆற்றின் கரையோரம் இருந்த, மரம் சாய்ந்து குணில் சாலையில் உள்ள பாலத்தின் குறுக்கே விழுந்தது அடைப்பு ஏற்பட்டது,

இதனால், ஆற்று நீர் பாலத்தை கடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியை துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ரேகா, கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித், முதுமலை ஊராட்சி கவுன்சிலர் நாராயணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, பொக்லைன் உதவியுடன் மூங்கில் மற்றும் மரத்தை அகற்றி சீரமைத்தனர்.

கவுன்சிலர் நாராயணன் கூறுகையில்,''மரம், மூங்கில்களால் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் ஆற்று நீர் செல்ல தடை ஏற்பட்டது.

மேலும் மழையின் போது, ஆற்றில் ஏற்படும் வெள்ளம், பாலத்தைக் கடந்து செல்ல முடியாமல், விவசாய தோட்டத்தில் நுழையும் சூழல் இருந்தது.

தற்போது, அப்பகுதியை வருவாய் துறையினர் சீரமைத்துள்ளதால், பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us