sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையோரம் கொட்டும் குப்பையில் தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு துறையினர்

/

சாலையோரம் கொட்டும் குப்பையில் தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு துறையினர்

சாலையோரம் கொட்டும் குப்பையில் தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு துறையினர்

சாலையோரம் கொட்டும் குப்பையில் தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு துறையினர்


ADDED : மே 04, 2024 12:05 AM

Google News

ADDED : மே 04, 2024 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுார் மூணு ரோடு பகுதியில் டன் கணக்கில் கொட்டப்பட்ட குப்பைகளில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

குன்னுார் நகராட்சியில், 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைஓட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை பூங்காவில் கொண்டு சென்று கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்படுகிறது. எனினும் சில இடங்களில் வனப்பகுதிகளிலும், சாலையோர பகுதிகளிலும் குப்பை கொட்டப்படுகின்றன.

இந்நிலையில் குன்னுார் ஓட்டுப்பட்டறை மூணு ரோடு பகுதியில் டன் கணக்கில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்படாமல் உள்ளது.

இங்கு கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கத்தால் குப்பைகள் தீப்பிடித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், வெளியிடங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில், 'இங்கு டன் கணக்கில் கொட்டப்பட்ட குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

நகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதற்கான தீர்வு காணவில்லை. சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us