sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சேதமடைந்த சாலையை சீரமைத்த மூதாட்டி

/

சேதமடைந்த சாலையை சீரமைத்த மூதாட்டி

சேதமடைந்த சாலையை சீரமைத்த மூதாட்டி

சேதமடைந்த சாலையை சீரமைத்த மூதாட்டி


ADDED : ஜூலை 25, 2024 09:50 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : கூடலுாரில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் செல்லும் சாலையில் உள்ள நெலாக்கோட்டை பகுதியில் குழிகள் ஏற்பட்டு சாலை சேதமடைந்து காணப்படுகிறது.

இந்த வழியாக வந்து செல்லும் வெளியூர், வாகன ஓட்டுனர்கள் குழிகள் இருப்பது தெரியாமல் வேகமாக வந்து, விபத்தில் சிக்குவதுடன் வாகனங்களும் பழுதடைகிறது.இதனால், சாலையை சீரமைக்க வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியதுடன், இப்பகுதி மக்களும் வலியுறுத்தியும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செவிமடுக்கவில்லை.

இந்நிலையில், இந்த பகுதியில் டீ கடை நடத்தி வரும், இந்திராணி,65, என்ற மூதாட்டி சாலையை சீரமைக்க களம் இறங்கினார். வீட்டிலிருந்து கற்களை கொண்டு வந்து, குழிகளில் நிரப்பி சீரமைத்தார்.

மக்கள் கூறுகையில், 'சாலையை சீரமைக்க வார்டு கவுன்சிலர்; இளைஞர்கள் முன்வராத நிலையில் மூதாட்டி ஒருவர் இந்த சமூக பணியில் ஈடுபடுவது, இளையோருக்கு முன் உதாரணமாக உள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us