/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூன்றாவது கண்ணை திறக்கும் கருவி புத்தகம்
/
மூன்றாவது கண்ணை திறக்கும் கருவி புத்தகம்
ADDED : ஏப் 30, 2024 11:30 PM
கோத்தகிரி;'மூன்றாவது கண்ணை திறப்பதற்கு உதவும் கருவிதான் புத்தகம்,' என, தெரிவிக்கப்பட்டது.
கோத்தகிரி கிளை நுாலகத்தில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. வாசகர் வட்ட தலைவர் கவுரி வரதராஜன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ பேசியதாவது:
காரல் மார்க்ஸ் எழுதிய , சார்லஸ் டார்வின் எழுதிய உயிரினங்களின் தோற்றம், சிக்மண்ட் பிராய்ட் எழுதிய, புத்தகம் கனவு விளக்கம் ஆகியவை உலக புகழ்பெற்ற புத்தகங்கள்.
வால்டர் எழுதிய புத்தகங்கள் பிரெஞ்சு புரட்சியை ஏற்படுத்தியது. பல புத்தகங்கள் உலக சரித்திரத்தை புரட்டி போட்டுள்ளன. டேவிட் டோரோ எழுதிய சிவில், ஒத்துழையாமை மற்றும் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற புத்தகங்கள் மகாத்மா காந்தியை நாட்டின் விடுதலைக்கு துாண்டியது.
புத்தகம் வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் கற்பனை திறனை அதிகரிக்க செய்து, மனதை ஒருமுகப்படுத்தும்.
மேலும், புத்தகம் வாசிப்பு ஒருவரை சமூக அக்கறை கொண்டுள்ளவராகவும் தலைமை பண்பு உடையவராகவும் பிறர் துன்பங்களை புரிந்து கொள்ளவும் உதவுகின்றன.
நமது நுாலகங்களில் உள்ள சிற்றிதழ்கள், ஏராளமான புதிய மக்களின் சிந்தனையை துாண்டுபவை. மனித மூளையை மூன்றாவது கண் என்று குறிப்பிடுகின்றனர். அந்த மூன்றாவது கண்ணை திறப்பதற்கு உதவும் ஒரு கருவிதான் புத்தகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்வட்ட புரவலர்கள் விவேராஜு, ஆசிரியர் ராஜ்குமார், ஜே.சி.ஐ., தலைவர் ராஜேந்திரன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் விமலா ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு புதிய வாசகர் அட்டை வழங்கப்பட்டது. நுாலகர் சுப்ரமணியம் வரவேற்றார். நுாலகர் ரமேஷ் நன்றி கூறினார்.