/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவிலில் நகைகள் உண்டியல் பணம் திருட்டு
/
கோவிலில் நகைகள் உண்டியல் பணம் திருட்டு
ADDED : ஆக 17, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் கொலக்கம்பை அருகே மாரியம்மன் கோவிலில் நகைகள் மற்றும் உண்டியல் உடைத்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னுார் கொலக்கம்பை அருகே கெரடாலீஸ் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு, ஒன்றரை பவுன் தங்கநகை, உண்டியல் பணம் திருடப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்பேரில், கொலக்கம்பை பொறுப்பு இன்ஸ்பெக்டர் சதீஷ், எஸ்.ஐ., இளையராஜா ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.