/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம்; கோடையிலும் உணவு தட்டுப்பாடு இல்லை
/
முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம்; கோடையிலும் உணவு தட்டுப்பாடு இல்லை
முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம்; கோடையிலும் உணவு தட்டுப்பாடு இல்லை
முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம்; கோடையிலும் உணவு தட்டுப்பாடு இல்லை
ADDED : ஏப் 26, 2024 01:46 AM

கூடலுார்;முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு, வனத்துறையினர் பசுந்தழைகளை கொள்முதல் செய்து வழங்கி வருவதால், அவைகளுக்கு கோடையிலும் பசுந்தீவன பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபயாரண்யம் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு வனத்துறை சார்பில் தினமும் காலை, 9:00 மணி, மாலை 6:00 மணிக்கு அரிசி சாப்பாடு, ராகி, கொள்ளு, மினரல்மிக்சர், தேங்காய், வெள்ளம், கரும்பு, உப்பு ஆகியவை வழங்கப்படுகிறது.
பகல் நேரங்களில், வளர்ப்பு யானைகளை அதன் பாகன்கள், உதவியாளர்கள் மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு அழைத்து வருவதுடன், இரவு நேரத்துக்கு தேவையான பசுந்தழைகளை, பாகன்கள் மரங்களிலிருந்து வெட்டி, யானைகள் மூலம் எடுத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
பசுந்தழைகளுக்காக மரக் கிளைகள் வெட்டப்படுவதால், மரங்கள் மொட்டையாகி பாதிக்கப்பட்டது. இதனால், மரக்கிளைகள் வெட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி வந்தனர்.
இதற்கு தீர்வு காணும் வகையிலும், வனத்துறையினர் தேவையான பசுந்தீவனத்தை, ஜன., முதல், சமவெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வழங்கி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தற்போது யானை முகாமில், 29 யானைகள் பராமரித்து வருகின்றோம்.
'இரண்டு குட்டிகளை தவிர மற்ற வளர்ப்பு யானைகளுக்கு தேவையான பசுந்தலைகள் வனத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
'இதன் மூலம் மரக்கிளைகள் வெட்டுவது தவிர்க்கப்பட்டுள்ளது; மேலும், கோடை வறட்சியிலும், வளர்ப்பு யானைகளுக்கு தடையின்றி பசுந்தீவனம் கிடைத்து வருகிறது,' என்றனர்.

