sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு மருத்துவமனை கட்ட 8.65 லட்சம் ரூபாயில், நிலம் வாங்கிய கிராம மக்கள்

/

அரசு மருத்துவமனை கட்ட 8.65 லட்சம் ரூபாயில், நிலம் வாங்கிய கிராம மக்கள்

அரசு மருத்துவமனை கட்ட 8.65 லட்சம் ரூபாயில், நிலம் வாங்கிய கிராம மக்கள்

அரசு மருத்துவமனை கட்ட 8.65 லட்சம் ரூபாயில், நிலம் வாங்கிய கிராம மக்கள்


ADDED : செப் 02, 2024 07:38 PM

Google News

ADDED : செப் 02, 2024 07:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர்; நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது, பாக்கனா கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதி மக்கள் மட்டும் இன்றி இதனை ஒட்டிய ராக்வுட், புத்தூர்வயல், ஓர்கடவு உள்ளிட்ட பகுதி மக்கள், தங்களின் மருத்துவ தேவைக்காக நெலாக்கோட்டை அல்லது உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது பந்தலூர் அரசு மருத்துவமனையை நாட வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்தப் பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில், போதிய அரசு பஸ் வசதிகளும் இல்லாததால், இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு மருத்துவமனைகளை நாடுவது என்பது இயலாத காரியமாக உள்ளது.

இதனால் தங்கள் கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் மருத்துவமனை கட்டுவதற்கு இடம் இல்லாத நிலையில், இதற்கு சாத்தியம் இல்லை என அரசுத்துறை அதிகாரிகள் கை விரித்தனர்.

இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து, கிராம வளர்ச்சி குழு என்ற அமைப்பை உருவாக்கி பொதுமக்கள் அனைவரும் இணைந்து, கிராமத்தின் மத்தியில் அரசு மருத்துவமனை கட்டுவதற்கு 17 சென்ட் நிலத்தை 8.65 லட்சம் மதிப்பீட்டில் வாங்கி உள்ளனர்.

இடத்திற்கான ஆவணங்கள் மற்றும் கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்டுவதற்கான கோரிக்கை மனுக்கள் அடங்கிய ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் , வளர்ச்சி குழு தலைவர் கவுன்சிலர் அன்வர்ஷாஜி, செயலாளர் வக்கீல் சவுக்கத் அலி, ஒருங்கிணைப்பாளர் அன்வர்அப்துல்லா, நிர்வாகிகள் ஷேக்அப்துல்லா, உம்மர் உள்ளிட்டோர் வழங்கினார்கள். அரசு மருத்துவமனை கட்டுவதற்கு நிலத்தை வாங்கி அரசிடம் ஒப்படைத்த கிராம மக்களை அதிகாரிகள் பாராட்டினார்கள்.






      Dinamalar
      Follow us