ADDED : ஆக 09, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி:கோத்தகிரி காங்., கமிட்டி சார்பில், வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், நிவாரணப் ெபாருட்கள் வழங்கப்பட்டன.
கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
அதன்படி, கோத்தகிரி வட்டார காங்., கட்சி சார்பாக, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், நீலகிரி மாவட்ட காங்., தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் தலைமையில், கட்சி மாவட்ட தலைமை பொருட்களை பெற்று கொண்டது.