sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தொழிலாளர்கள் சென்ற வேன் விபத்தில் 13 பேர் காயம்

/

 தொழிலாளர்கள் சென்ற வேன் விபத்தில் 13 பேர் காயம்

 தொழிலாளர்கள் சென்ற வேன் விபத்தில் 13 பேர் காயம்

 தொழிலாளர்கள் சென்ற வேன் விபத்தில் 13 பேர் காயம்


ADDED : நவ 24, 2025 05:23 AM

Google News

ADDED : நவ 24, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டியில் கேரட் கழுவ சென்ற வேன் தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 13 பேர் காயமடைந்தனர்.

ஊட்டி அடுத்த தேனாடுகம்பை அருகில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த, 13 தொழிலாளர்கள் வேனில் கேரட் அறுவடைக்கு சென்றனர். அறுவடை முடிந்த பிறகு கேரட்டை கழுவி சுத்தம் செய்ய கேரட் கழுவும் இயந்திரம் இருக்கும் இடத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

அதிகாலை நேரம் என்பதாலும், பனிமூட்டம் இருந்ததாலும் டிரைவர் மெதுவாக வேனை இயக்கியுள்ளார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த கேரட் தோட்டத்திற்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் தனியாக கழன்று விழுந்தன. வேனில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் வேனில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, 7 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர், மேலும், 6 பேர் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேனாடுகம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அதிகாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டெருமை திடீரென வேனின் குறுக்கே சென்றதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us