ADDED : ஜூலை 17, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் கரிமொர ஹட்டியில், குப்பை கொட்டும் இடத்தில், குட்டியுடன் வந்த கரடி குப்பையில் உணவு தேடியது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில்,'இந்த பகுதியில் உள்ள பார்த்தீனிய செடிகளை அகற்ற உபதலை ஊராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. அங்குள்ள புதர்களுக்குள் கரடிகள் தஞ்சமடைகிறது. குப்பைகளும் அகற்றப்படாமல் உள்ளது. இங்கு அசம்பாவிதம் நடப்பதற்குள், வனத்துறையினர் கூண்டு வைத்து கரடிகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்,' என்றனர்.
