/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அனைவரையும் கவர்ந்த பழங்குடியினர் நடனம்
/
அனைவரையும் கவர்ந்த பழங்குடியினர் நடனம்
ADDED : அக் 07, 2024 12:17 AM

பந்தலுார் : பந்தலுார் அருகே அத்திச்சால் பகுதியில் நடந்த பழங்குடியின மக்களின் கலாசார நடனம் அனை வரையும் கவர்ந்தது.
பந்தலுார் அருகே அத்திச்சால் பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாய பழங் குடியின மக்கள் சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அவ்வப்போது அரசு துறைகளில் சார்பில் சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு கோழி வளர்ப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இந்த பகுதியில் கூடிய மக்கள் தங்கள் அமைப்பின் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். தொடர்ந்து பழங்குடியின பெண்கள் பங்கேற்ற கலாசார நடனம் இடம்பெற்றது. அதில், பழங்குடியின மக்கள் தங்களின் மொழியில் பாடல்களை பாடி நடனம் ஆடியது, அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

