sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இரட்டிப்பு சம்பளம் வழங்காத 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

/

இரட்டிப்பு சம்பளம் வழங்காத 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

இரட்டிப்பு சம்பளம் வழங்காத 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

இரட்டிப்பு சம்பளம் வழங்காத 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


ADDED : ஆக 17, 2025 09:39 PM

Google News

ADDED : ஆக 17, 2025 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய, 35 நிறுவனங்கள் மீது தொழிலாளர்துறை சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது.

சுதந்திர தினத்தன்று இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களை கண்டறிந்து. அந்த நிறு வனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க தொழிலாளர் ஆணை யர் ராமன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ்சந்திரன் தலைமையில் தொழிலாளர் துறையினர், மாவட்டத்தில் குன்னுார், ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட, 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை முறையாக அளிக்காமல் பணிக்கு அமர்த்திய, 35 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அந்நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us