sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 மறியலில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழியர்கள் கைது

/

 மறியலில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழியர்கள் கைது

 மறியலில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழியர்கள் கைது

 மறியலில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழியர்கள் கைது


ADDED : ஜன 07, 2026 05:29 AM

Google News

ADDED : ஜன 07, 2026 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டியில் மறியலில் ஈடுபட முயன்ற, 330 பேரை போலீசார் கைது செய்தனர்.

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்குவதாக, முதலமைச்சரின் வாக்குறுதி, 313ஐ நிறைவேற்ற வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம், ஊட்டியில் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சசிகலா தலைமை வகித்தார்.

அதில், 'அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்; குடும்ப ஓய்வூதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும்.

மினி மையங்களில் இருந்து, பிரதான மையங்களுக்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கான ஒரு 'இன்கிரிமென்ட்' வழங்க வேண்டும்; காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

கடந்த, 1993ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 100 சதவீதம் பதவி உயர்வை வழங்க வேண்டும்,' என்பன கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற, 330 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us