sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

/

ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேக விழா


ADDED : நவ 06, 2025 11:05 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:- நீலகிரியில் ஐப்பசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, அனைத்து ஈஸ்வரன் கோவில்களிலும், இறைவனுக்கு அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.

ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தில், சிவன் கோவில்களில் இறைவனுக்கு அன்னாபிஷேக விழா நடப்பது வழக்கம்.

நேற்று முன்தினம், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, ஊட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவில்களிலும், சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, அலங்காரம் நடந்தது.

அதேபோல், ஊட்டி பழைய அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள சிவன், அன்னமலை முருகன் கோவிலில் கோவில் ஸ்தாபர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், இளைய மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில் அன்னாபிஷேகம் நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us