தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அதிநவீன தொழில்நுட்பத்தில் வேகமெடுத்த ராணுவம்; எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பெருமிதம்

அதிநவீன தொழில்நுட்பத்தில் வேகமெடுத்த ராணுவம்; எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பெருமிதம்

அதிநவீன தொழில்நுட்பத்தில் வேகமெடுத்த ராணுவம்; எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பெருமிதம்


ADDED : ஆக 15, 2025 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 09:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், 79வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில், ராணுவ போர் நினைவு சதுக்கத்தில், எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன், நாகேஷ் சதுக்கத்தில் தேசிய கொடியேற்றி, பேசியதாவது:

இந்திய ராணுவத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். பல சகாப்தங்களாக ராணுவம் தொடர்ந்து பரிணமித்து வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்ப, உபகரணங்களை, அதிநவீன தொழில்நுட்பத்துடன், அதன் செயல்பாட்டு திறன்கள் மேம்படுத்துதலில் அதிவேகத்தை அடைந்து சிறப்பு பெற்றுள்ளது.

நம் ராணுவத்தை எதிர்கால போரின் சவால்களுக்கு தயாராக இருக்கும் நவீன, சுறுசுறுப்பான மற்றும் தகவலமைப்பு சக்தியாக வடிவமைத்துள்ளது.

பாரதத்தின் தொலைநோக்கு பார்வையால் வழிநடத்தப்பட்டு, ராணுவம், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்தி வருகிறது. மேலும், தொழில்நுட்ப ரீதியாக தன்னம்பிக்கை, போர் தயார்நிலை மற்றும் சுறுசுறுப்பை அடைய நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேசத்தின் உறுதியான பாதுகாவலராக தொடர்ந்து நிற்கும், இந்திய ராணுவம், எல்லைகளில் பாதுகாப்பது மட்டுமின்றி, பேரிடர் நிவாரணத்தில் உதவுவது, ராணுவ இசை நிகழ்ச்சி முதல் தேசத்தை மேம்படுத்தும் அனைத்து பங்களிப்பிலும் ஈடுபட்டு ராணுவ சேவை நெறிமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

ராணுவத்தின் நீடித்த அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை மற்றும் தேச பாதுகாப்பில் உறுதியான அர்ப்பணிப்பு உள்ளடக்கியது, நமது வீரர்களின் தைரியம், நமது மக்களின் பெருமை மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தின் பகிரப்பட்ட வாக்குறுதியால் மூவர்ணக் கொடி தொடர்ந்து உயரே பறக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, ராணுவ வீரர்கள் மற்றும் அக்னி வீரர்களின், 10 கி.மீ., துார சுதந்திர தின ஓட்டம் நடந்தது. அதில், தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் வீர முழக்கமிட்டு வந்தனர். ராணுவ இசை நிகழ்ச்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us