sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தானியங்கி கேமரா திருட்டு; போலீசில் வனத்துறை புகார்

/

தானியங்கி கேமரா திருட்டு; போலீசில் வனத்துறை புகார்

தானியங்கி கேமரா திருட்டு; போலீசில் வனத்துறை புகார்

தானியங்கி கேமரா திருட்டு; போலீசில் வனத்துறை புகார்


ADDED : டிச 04, 2024 09:49 PM

Google News

ADDED : டிச 04, 2024 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் வன கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்புக்காக வைக்கப்பட்ட, 2 தானியங்கி கேமராக்கள் காணாமல் போனது குறித்து வனத்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கூடலுார் வனக்கோட்டத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள், சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த மாதம், 3ம் தேதி துவங்கியது. இதற்காக, 105 இடங்களில் தலா இரண்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

ஒரு மாதம் நடைபெற்ற இப்பணி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. தொடர்ந்து, கேமராக்கள் அகற்றப்பட்டு, அதில் பதிவான படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் கணக்கெடுப்பு தகவல் வெளியாகும்.

இதனிடையே, நந்தட்டி அருகே, தனியார் எஸ்டேட் பகுதியில் வனவிலங்கு கணக்கெடுப்புக்காக பொருத்தப்பட்ட, 2 தானியங்கி கேமராக்களை காணவில்லை. இது குறித்து, வனத்துறையினர் கூடலுார் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us