/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொம்மலாட்டம் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
பொம்மலாட்டம் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பொம்மலாட்டம் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பொம்மலாட்டம் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜன 08, 2026 05:13 AM
கோத்தகிரி: கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பொம்மலாட்டம் வாயிலாக, மாணவர்களுக்கு போக்சோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நிர்மலா, 'நல்ல தொடுதல்;கெட்ட தொடுதல்' குறித்து, பொம்மலாட்டம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு உட்பட பல்வேறு பிரச்னைகளை எவ்வாறு கையாள்வது, புகார் அளிப்பதன் அவசியம், போக்சோ சட்ட தண்டனை குறித்து விரிவாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தவறுகளை முன்கூட்டியே தடுப்பது; அறிமுகமானவர், உறவினர் என, யாராக இருந்தாலும், தவறு நடப்பதை ஏற்று கொள்ள கூடாது, என அறிவுறுத்தப்பட்டது.

