sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடலுார் வயல்களில் 'அசோலா' வளர்ப்பு; விவசாயத்துக்கு இயற்கை உரமாக பயன்படுத்த முடிவு

/

கூடலுார் வயல்களில் 'அசோலா' வளர்ப்பு; விவசாயத்துக்கு இயற்கை உரமாக பயன்படுத்த முடிவு

கூடலுார் வயல்களில் 'அசோலா' வளர்ப்பு; விவசாயத்துக்கு இயற்கை உரமாக பயன்படுத்த முடிவு

கூடலுார் வயல்களில் 'அசோலா' வளர்ப்பு; விவசாயத்துக்கு இயற்கை உரமாக பயன்படுத்த முடிவு


ADDED : ஜூலை 08, 2025 08:40 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் வேளாண் பல்கலைக்கழக, நெல் ஆராய்ச்சி மையத்தில், உள்ள வயல்களில் இயற்கை உரமாக பயன்படுத்தவும், களை செடிகள் வளர்வதை தடுக்கவும், உயிர் உரமான 'அசோலா' நீர் தாவரம் வளர்க்கப்படுகிறது.

கூடலுார் புளியம்பாறை பகுதியில், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், ஒட்டு நெல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆராய்ச்சிக்காக நெல் நடவு செய்யப்பட்டு, பல்வேற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்கான பல புதிய ரக விதைநெல் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள வயல்களில், இயற்கை உரமாக பயன்படுத்தவும், களைச்செடிகள் வளர்வதை தடுக்கவும், உயிர் உரமான 'அசோலா' நீர் தாவரத்தை வளர்த்து வருகின்றனர். தண்ணீரில் மிதந்து வளரும், நீர்வாழ் தாவரமாக இவை நெற்பயிர்களுக்கு தேவையான சத்தை வழங்குகிறது.

இயற்கை உரமாக பயன்படும்


பிற விவசாய பயிர்களின் வளர்ச்சிக்கு அசோலா இயற்கை உரமாக உதவுகிறது. கால்நடைகளுக்கு, ஊட்டச்சத்து மிக்க தீவனமாகவும் பயன்படுகிறது. மேலும் தண்ணீர் ஆவியாவதை தடுத்து நீரை சேமிக்க உதவுகிறது. இதன் பயனை கருத்தில் கொண்டு இவற்றை அதிகளவில் வளர்க்க வேளாண் ஆராய்ச்சி மையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் நெல் நடவுக்கு பின் இந்த செடிகளை வளர்ப்பதன் மூலம், அடுத்த போகத்துக்கான செலவினங்கள் குறைகிறது.

ஆராய்ச்சி மைய தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், 'மிதவை தாவரமாக வளரக்கூடிய அசோலா தாவரம், உயிர் உரமாகும். இதனை வயல்களில் வளர்ப்பதால், நெல்வளர்ச்சிக்கு இயற்கை உரமாக உதவுகிறது. நீர் ஆவி ஆகுவதை தடுக்கிறது. கோடை காலங்களில் தண்ணீர் இல்லை என்றால் இவை காய்ந்து உரமாகிறது.

இதனை கறவை மாடுகளுக்கு வழங்குவதன் மூலம், பாலில் கூடுதல் பயன் கிடைக்கும். கோழியின் முட்டை, அடர் தீவனம் மட்டும் அளிக்கும் கோழி முட்டையின் அளவைவிட அதிகமாக இருக்கும்.

கோழி, கறவை மாடு, வெண்பன்றி, ஆடு, வாத்து, முயல் ஆகியவைக்கு இதனை நேரடியாக பசுந்தீவனமாக வழங்கலாம். இதனை அனைத்து விவசாய நிலங்களிலும் வளர்த்து பயன்பெறலாம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us