/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜன 24, 2024 11:53 PM

குன்னுார் : குன்னுார் ஓட்டுப்பட்டறை ஸ்டான்லி பார்க் பாலமுருகன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
கடந்த, 1976ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கோவில் கடந்த சில மாதங்களாக சீரமைக்கப்பட்டது. கடந்த, 23ம் தேதி விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம், விமான புதிய கோபுர கலசம், ஐயப்பன் சிலை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கிராம சாந்தி மற்றும் விமான கலச ஸ்தாபனம் அஷ்ட பந்தனம், மருந்து சார்த்துதல் முதற்காலயாக பூஜைகள் நடந்தன. நேற்று இரண்டாம் காலயாக பூஜை ரக் ஷா பந்தனம், நாடி சந்தானம், மகாபூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது.
காலை, 10:00 மணிக்கு கோவில் கலச கும்பாபிஷேகம், பாலமுருகனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, மகா அபிஷேகம் கோ பூஜை, தச தரிசனம் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று தைப்பூச உற்சவம், உச்சிகால பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.