sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 காட்டு யானையால் வாழை மரங்கள் சேதம்

/

 காட்டு யானையால் வாழை மரங்கள் சேதம்

 காட்டு யானையால் வாழை மரங்கள் சேதம்

 காட்டு யானையால் வாழை மரங்கள் சேதம்


ADDED : டிச 30, 2025 06:59 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் தொரப்பள்ளி, அல்லுார்வயல் பகுதியில்,வாழை மரங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கூடலுார் தொரப்பள்ளி, அல்லுார்வயல், கோடமூலா, குணில் பகுதிகள் முதுமலை புலிகள் காப்பக எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. இரவில் காட்டு யானைகள் அகழியை கடந்து, விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவு அல்லுார் பகுதியில் சுந்தரம் என்பவரின் விவசாய தோட்டத்தில் நுழைந்த யானை, 400க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்து சேதம் செய்து சென்றுள்ளது.

விவாசயிகள் கூறுகையில், 'இங்கு யானையால் சேதமான நேந்திரன் வாழை மரங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்குவதுடன், பிரச்னைக்கு நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us