sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இட்டக்கல் கிராமத்தில் பசவ ஜெயந்தி விழா கோலாகலம்

/

இட்டக்கல் கிராமத்தில் பசவ ஜெயந்தி விழா கோலாகலம்

இட்டக்கல் கிராமத்தில் பசவ ஜெயந்தி விழா கோலாகலம்

இட்டக்கல் கிராமத்தில் பசவ ஜெயந்தி விழா கோலாகலம்


ADDED : மே 21, 2025 11:04 PM

Google News

ADDED : மே 21, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி, ; கோத்தகிரி அருகே உள்ள இட்டக்கல் கிராமத்தில், பசவ ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், லிங்காயத்து சமுதாய மக்கள் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் நிலையில், ஆண்டுதோறும், பசவ ஜெயந்தி விழா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நடப்பாண்டுக்கான விழா, மைசூரு சுத்துார் மடம் ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திரா மகாசுவாமி தலைமையில், காலை, 7:45 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்கியது. நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்து பசவ ஜெயந்தி விழா தலைவர் போஜராஜன் தலைமை வகித்தார். அவரை, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் கவுரவித்தார். விழாவில், தேர் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை நடராஜ் சுவாமிகள், உறங்காடு சீனி பார்வதி பசுவராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

காலை, 11:00 மணி முதல் பசவ ஜெயந்தி விழா ஆசியுரை, பஜனை ஆடல் பாடல் இடம் பெற்றது. விழாவில், ஓய்வு பெற்ற கர்நாடகா நீதிபதி அரலி நாகராஜ் உள்ளிட்டோர் பலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

நிர்வாகிகள் போஜன் சந்தய்யன், சுப்ரமணி, லிங்கராஜ் மற்றும் பசவேஸ்வரா மடம் அறங்காவலர்கள், விழா குழுவினர், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us