/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பகலில் உலா வரும் கரடி; மக்கள் நடமாட அச்சம்
/
பகலில் உலா வரும் கரடி; மக்கள் நடமாட அச்சம்
ADDED : ஜூலை 17, 2025 09:28 PM
குன்னுார்; குன்னுார் பெட்டட்டி சுற்றுப்புற பகுதிகளில் பகல் நேரத்திலேயே கரடி நடமாட்டம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுாரில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதில், பெட்டட்டி பகுதியில் இரவில் மட்டுமே வந்த கரடிகள், பகல் நேரத்தில் உலா வருகிறது. இதனால், சாலையில், பள்ளி மாணவ, மாணவிகள், மக்கள் தனியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து முதுமலையில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.