sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோவில் திருவிழாவில் பறவை காவடி, பால் குடம்

/

கோவில் திருவிழாவில் பறவை காவடி, பால் குடம்

கோவில் திருவிழாவில் பறவை காவடி, பால் குடம்

கோவில் திருவிழாவில் பறவை காவடி, பால் குடம்


ADDED : மார் 30, 2025 10:33 PM

Google News

ADDED : மார் 30, 2025 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார், 2வது மைல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பறவை காவடி பூட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

கூடலுார், 2வது மைல் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில், 43வது ஆண்டு தேர்திருவிழா, 28ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் சிவன், சக்தி, முருகன், நவகிரக வழிபாடுகளுடன் துவங்கியது.

9:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிறப்பு பூஜைகள், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு வேடன்வயல் ஆற்றில் இருந்து அம்மன் குடியழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம, காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன.

மதியம், 12:00 மணிக்கு வேடன்வயல் பாலத்திலிருந்து, பறவைக்காவடி ஊர்வலம் துவங்கியது. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். ஊர்வலம், 2வது மைல் வரை சென்று நிறைவு பெற்றது. இரவு, தேர் ஊர்வலம் நடந்தது.

நேற்று, காலை சிறப்பு பூஜைகளுடன், கோவிலில் இருந்து கரக ஊர்வலம் புறப்பட்டது. தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us