தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரோஜா பூங்காவில் புரூனிங் பணி துவக்கம்

 ரோஜா பூங்காவில் புரூனிங் பணி துவக்கம்

 ரோஜா பூங்காவில் புரூனிங் பணி துவக்கம்


ADDED : பிப் 13, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் கோடை சீசனுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்குள்ள ரோஜா பூங்காவில் புரூனிங் செய்யும் பணி துவங்கியது.

ஊட்டி ரோஜா பூங்காவில், 30,000-க்கும் அதிகமான ரோஜா செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்., மே மாதங்களில் நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ரோஜா செடிகளை புரூனிங் செய்யும் பணி கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார். புரூனிங் செய்த செடிகளில் இருந்த ரோஜா மலர்களை பணியாளர்கள் சேகரித்தனர்.

தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஆண்டு தோறும் ரோஜா பூங்காவிற்கு அதிகபட்சமாக, 10 லட்சம் பேர் வரை வருகின்றனர். ரோஜா பூங்காவில் கடந்த ஆண்டு கூடுதலாக, 100 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்

நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் நவநீதா, துணை இயக்குனர் பெபிதா, உதவி இயக்குனர்கள் பெரோஸ்கான், ஜெயந்தி பிரேம்குமார், தோட்டக்கலை துறை அலுவலர்கள் மேனகா, செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us