/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுய தொழிலில் மேம்பட பெண்களுக்கு அழைப்பு
/
சுய தொழிலில் மேம்பட பெண்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 31, 2025 08:18 PM

பந்தலுார்; 'கடன் வாங்கும் பெண்கள் சுயதொழில் செய்து, கடனை திரும்ப செலுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பந்தலுார் தனியார் மண்டபத்தில், மக்கள் வள மேம்பாட்டு அறக்கட்டளை; பன்னாட்டு வெற்றியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்; பாரதிதாசன் தொலைதுார கல்வி இயக்கம் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை செயலாளர் மகேந்திரன் வரவேற்றார்.
தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், ''அரசு சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல்வேறு வங்கிகள் மற்றும் நுன்கடன் நிறுவனங்கள் கடன்களை வழங்குகின்ற ன.
ஏதோ ஒரு தேவைக்காக கடன்களை வாங்கும் அதே நேரம், அதனை திரும்ப செலுத்த தொழில் வாய்ப்புகள் இல்லாமல் ஒவ்வொரு குடும்பமும் சிரமப்பட்டு வருகிறது. இதனை மாற்ற, கடன் வழங்கி சிறு தொழில் மற்றும் குடிசை தொழில்கள் செய்து, அதன் மூலம் கடன்களை திரும்ப செலுத்தவும், தொழில் முனைவோர்களாக பெண்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்காக ஒவ்வொரு பகுதியிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு, கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை மகளிர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.
அறக்கட்டளை டைரக்டர் உமா மகேஸ்வரன் பேசுகையில், ''பெண்கள் நினைத்தால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும். பெற்ற கடனை வைத்து சுய தொழில் செய்து தொழில் முனைவோர்களாக மாறினால், வங்கிகள் அவர்களை தேடி வந்து கடன் தரும் நிலை உருவாகும். தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள், தொழில் முனை வோராக முன்னேற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். நிகழ்ச்சியில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள் பங்கேற்றனர்.