sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மூடப்பட்ட அரசு பள்ளி போராட்டத்தால் திறப்பு

/

மூடப்பட்ட அரசு பள்ளி போராட்டத்தால் திறப்பு

மூடப்பட்ட அரசு பள்ளி போராட்டத்தால் திறப்பு

மூடப்பட்ட அரசு பள்ளி போராட்டத்தால் திறப்பு


ADDED : செப் 09, 2025 12:26 AM

Google News

ADDED : செப் 09, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே பென்னை பகுதியில் மூடப்பட்ட பழங்குடியினர் பள்ளி, மக்களின் போராட்டத்தால் மீண்டும் திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், மாணவர்கள் எண்ணிக்கை, 'ஜீரோ'வாக உள்ளதாக கூறி, 25 அரசு பள்ளிகளை மாநில கல்வித்துறை மூடியது. அதில், பந்தலுார் அருகே பென்னை பகுதியில், 32 மாணவருடன் செயல்பட்டு வந்த அரசு ஆரம்பப்பள்ளியும் ஒன்று.

இதனால், பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்தது. இதுகுறித்து, நம் நாளிதழில், ஆக., 23ல் செய்தி வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, 30ம் தேதி, அனைத்து கட்சியினர் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதன் எதிரொலியாக, அரசின் உத்தரவின் கீழ், நேற்று காலை பென்னை ஆரம்ப பள்ளி மீண்டும் திறந்து செயல்பட துவங்கியது.

நீலகிரி பண்டைய பழங்குடியினர் சங்கம், மாநில முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில், 'நீலகிரியில் மூடப்பட்ட மற்ற, 24 பள்ளிகளையும் திறந்து, பழங்குடியினர் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us