sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேர்தல் விதியால் பணம் பறிமுதல்: கதறி அழுத பஞ்சாப் பெண்

/

தேர்தல் விதியால் பணம் பறிமுதல்: கதறி அழுத பஞ்சாப் பெண்

தேர்தல் விதியால் பணம் பறிமுதல்: கதறி அழுத பஞ்சாப் பெண்

தேர்தல் விதியால் பணம் பறிமுதல்: கதறி அழுத பஞ்சாப் பெண்

8


ADDED : மார் 25, 2024 02:32 PM

Google News

ADDED : மார் 25, 2024 02:32 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: பஞ்சாபில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் வைத்திருத்த ரூ. 69 ஆயிரத்து 400 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணத்தை திருப்பிக் கேட்டு வடமாநில பெண் கதறல் அழும் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, டபுள் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விமானத்தில் கோவை வந்து, அங்கிருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர், உரிய ஆவணங்கள் இன்றி 69,400 ரூபாய் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண், “நாங்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விமான மூலம் கோவை வந்தோம். அங்கிருந்து வாடகை காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தோம். எங்களுக்கு இந்த நடைமுறை தெரியாது. இப்போது கையில் செலவிற்கு கூட பணமில்லை. அதனால் எங்களது பணத்தை திரும்பக் கொடுங்கள்” எனக் கேட்டு கதறி அழுதார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.






      Dinamalar
      Follow us