sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானை; அச்சத்தில் டான்டீ தொழிலாளர்கள்

/

 தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானை; அச்சத்தில் டான்டீ தொழிலாளர்கள்

 தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானை; அச்சத்தில் டான்டீ தொழிலாளர்கள்

 தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானை; அச்சத்தில் டான்டீ தொழிலாளர்கள்


ADDED : டிச 25, 2025 06:49 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

கூடலுார் ஓவேலி குண்டம்புழா வனப்பகுதியை ஒட்டி பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள குண்டபுழா -புளியாம்பாறை இடையே, இரவு நேரங்களில் காட்டு யானைகள் தேயிலை தோட்டம் வழியாக கடந்து செல்கின்றன.

அவ்வப்போது காட்டு யானைகள், பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பாண்டியார் டான்டீ சரகம் எண்-1, தேயிலை தோட்டத்தில் காட்டு யானை முகாமிட்டது. இதனால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, வன காவலர் சுப்ரமணி, வேட்டை தடுப்பு காவலர் வாசுதேவன் அப்பகுதிக்கு சென்று, தொழிலாளர்கள் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us