sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உபதலை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்க மக்களுக்கு அறிவுரை

/

உபதலை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்க மக்களுக்கு அறிவுரை

உபதலை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்க மக்களுக்கு அறிவுரை

உபதலை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்க மக்களுக்கு அறிவுரை


ADDED : ஜூலை 29, 2011 11:16 PM

Google News

ADDED : ஜூலை 29, 2011 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர் : 'ஊராட்சியில் போதியளவு துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், தெருக்களில் குப்பை தொட்டிகளை வைக்க முடியாத நிலை உள்ளது,' என உபதலை கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

உபதலை ஊராட்சி சார்பில் சமுதாய கூட வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சிதம்பரம் முன்னிலை வகித்து பேசியதாவது; கிராமப்புறங்களில் குப்பைகள், கால்வாயில் கொட்டப்படுவதால் ஆங்காங்கே குப்பை தொட்டி வைத்து, ஊராட்சி சார்பில் குப்பைகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை மிக குறைவு; குப்பைகளை அள்ள வாகன வசதியும் இல்லை. இத்தகைய நிலையில் வீதி, தெருக்களில் குப்பைத் தொட்டிகளை வைத்து, அதில் சேரும் குப்பைகளை அகற்ற முடியாது; கால்வாய்களை பராமரிக்க வேண்டியது அப்பகுதி மக்களின் பொறுப்பு. இவ்வாறு, சிதம்பரம் பேசினார். ஊராட்சி உதவியாளர் சுகுமார், தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி உறுப்பினர்கள் மணி, ரகு, நிம்மி, நிர்மலா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய துணை பி.டி.ஓ., மரிய கொரட்டி, மண்டல தாசில்தார், வி.ஏ.ஓ., அமலா, மின்வாரிய உதவி பொறியாளர் நிர்மல் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us