sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சோலூர் சாலையில் 3 பஸ்கள் சிறைபிடிப்பு

/

சோலூர் சாலையில் 3 பஸ்கள் சிறைபிடிப்பு

சோலூர் சாலையில் 3 பஸ்கள் சிறைபிடிப்பு

சோலூர் சாலையில் 3 பஸ்கள் சிறைபிடிப்பு


ADDED : செப் 08, 2011 11:18 PM

Google News

ADDED : செப் 08, 2011 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி அருகே கோக்கால் பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி அப்பகுதி மக்கள் 3 அரசு பஸ்களை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி அருகே உள்ள கோக்கால் பகுதிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு இயக்கப்படும் பஸ் 44 சீட் கொண்டது. காலை நேரங்களில் கோக்கால் பகுதியில் இருந்து இப்பஸ்சில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என 100க்கும் மேற்பட்டோர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் பஸ்சின் கூரை மீதும் ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து பலமுறை போக்குவரத்து கிளை கழக மேலாளருக்கு புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம், அதிக பயணிகள் காரணமாக ஊட்டிக்கு படிக்க வரும் பள்ளி மாணவ, மாணவியர்கள் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஊட்டி-சோலூர் சந்திப்பில் அப்பகுதி மக்கள் 3 அரசு பஸ்களை சிறைப்பிடித்தனர். இது குறித்து தகவல் தெரிந்ததும் அரசு போக்குவரத்து கழக கிளை-2 மேலாளர் கணேஷ் மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். வரும் செவ்வாய் கிழமை முதல் கோக்காலுக்கு கூடுதலாக ஒரு 'டிரிப்' இயக்கப்படும் என உறுதியளித்தால், பஸ்களை விடுவித்து மக்கள் சென்றனர்.






      Dinamalar
      Follow us