sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரி மக்களுக்கு "இன்டக்சன் ஸ்டவ்' உணவுத் துறை அமைச்சர் பரிந்துரை

/

நீலகிரி மக்களுக்கு "இன்டக்சன் ஸ்டவ்' உணவுத் துறை அமைச்சர் பரிந்துரை

நீலகிரி மக்களுக்கு "இன்டக்சன் ஸ்டவ்' உணவுத் துறை அமைச்சர் பரிந்துரை

நீலகிரி மக்களுக்கு "இன்டக்சன் ஸ்டவ்' உணவுத் துறை அமைச்சர் பரிந்துரை


ADDED : ஆக 28, 2011 11:23 PM

Google News

ADDED : ஆக 28, 2011 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ''நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசம் என்பதால், மின் விசிறிக்கு பதிலாக, 'இன்டக்சன் ஸ்டவ்' வழங்க முதல்வரிடம் பரிந்துரைக்கப்பட்டுள் ளது,'' என, உணவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த விழாவில், உணவுத் துறை அமைச்சர் புத்தி சந்திரன் பேசியதாவது: மாணவர்கள் நலனின், முதல்வர் தனி அக்கறை கொண்டுள்ளார். சேலம் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பணம் செலுத்த வசதியில்லாத, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவன் மணிகண்டனின் 6 வருட கல்வி மற்றும் அனைத்து கட்டணத்தையும் அரசு ஏற்று கொண்டுள்ளது. நீலகிரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ்., தேர்வுகளில் வெற்றி பெற ஏதுவாக, மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையம், மாவட்டத்தில் துவங்கப்பட உள்ளது. இன்ட்கோ தொழிற்சாலைகளுக்கு, அரசு 3 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. தற்போது வட்டியுடன் கடன் தொகை 16 கோடியாக உயர்ந்துள்ளது; கடனை திரும்ப செலுத்தினால், வட்டி ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஒரு கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டுள்ள நிலையில், 2 கோடி ரூபாயும் விரைவில் செலுத்தப்படும். செப்டம்பர் 15ம் தேதி முதல், இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறிகள் வழங்கப்பட உள்ளன. நீலகிரி மாவட்டம் குளிர்பிரதேசம் என்பதால், மின் விசிறிகளுக்கு பதிலாக, இன்டக்சன் ஸ்டவ் வழங்க, முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளேன்; அவரும், பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு, அமைச்சர் புத்திசந்திரன் கூறினார்.






      Dinamalar
      Follow us