sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பேரிடர் தடுப்பு நடவடிக்கை; ஊட்டியில் ஆய்வு கூட்டம்

/

பேரிடர் தடுப்பு நடவடிக்கை; ஊட்டியில் ஆய்வு கூட்டம்

பேரிடர் தடுப்பு நடவடிக்கை; ஊட்டியில் ஆய்வு கூட்டம்

பேரிடர் தடுப்பு நடவடிக்கை; ஊட்டியில் ஆய்வு கூட்டம்


ADDED : செப் 30, 2024 10:55 PM

Google News

ADDED : செப் 30, 2024 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டியில் மாநில திட்டக்குழு ஆணைய சார்பில், வடகிழக்கு பருவ மழை பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

மாநில திட்டக்குழு ஆணைத்தின் துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆணையத்திடம் கூறியதாவது:

மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறை, தீயணைப்பு துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களிடம் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில், 283 அபாயகரமான பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளை கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க, 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தவிர, நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி துறையின் கீழ் வரும் 'கல்வெட்கள்' மற்றும் கால்வாய்களை துாரவார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சீனிவாசன், விஜயபாஸ்கர், கூடுதல் கலெக்டர் சங்கீதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் பாலுசாமி உட்பட, அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us